உத்தரப்பிரதேசத்தில் டீச்சரை கற்பழித்த மாணவன்: வீடியோ எடுத்து மிரட்டல்!!

Read Time:2 Minute, 0 Second

5a197b2c-f3a1-458b-886c-d15f7cd0c1fb_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் 23 வயது இளம்பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

பல்வாகேரி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை இரவு டீயூசன் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மூன்று பேர் அவரை கடத்தி சென்று கற்பழித்துள்ளனர். அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொடிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர்.

பின்னர் நடந்த சம்பவத்தை இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகார் மனுவை ஏற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு வாலிபர்களை கைது செய்தனர். கற்பழிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெண்கள் பல்வேறு பகுதிகளில் கற்பழிக்கப்பட்ட சம்பவங்களால் உத்தரபிரதேசம் மாநில அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் மீண்டும் அம்மாநிலத்தில் கற்பழிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதால் உ.பி. அரசுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஷ்கோடி-இலங்கை இடையே 5-வது மணல் மேட்டில் இந்தியா பெயர் பலகை!!
Next post 46 நர்சுகளுக்கும் அரேபிய வளைகுடா நாடுகளில் வேலை அளிப்பதாக தொழிலதிபர் அறிவிப்பு!!