46 நர்சுகளுக்கும் அரேபிய வளைகுடா நாடுகளில் வேலை அளிப்பதாக தொழிலதிபர் அறிவிப்பு!!

Read Time:1 Minute, 28 Second

c7767d73-8c28-4855-8935-5428fedab017_S_secvpfஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தவர்களால் கடத்தப்பட்டு, பின்னர் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று நாடு திரும்பிய 46 இந்திய நர்சுகளுக்கும் அரேபிய வளைகுடா நாடுகளில் வேலை அளிக்க தயார் என்று பிரபல இந்திய தொழிலதிபரான பி.ஆர்.ஷெட்டி என்பவர் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் சில பகுதிகள், எகிப்து மற்றும் வளைகுடா நாடுகளில் ”என்.எம்.சி. ஹெல்த் கேர் குரூப்” என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை பி.ஆர்.ஷெட்டி நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கு திரும்பியிருப்பதால் வேலையை இழந்திருக்கும் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நர்சு, மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 45 நர்சுகளுக்கும் தனது நிறுவனங்களில் வேலை அளிக்க தயார் என்று அறிவித்துள்ள இவர், இது தொடர்பாக கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரப்பிரதேசத்தில் டீச்சரை கற்பழித்த மாணவன்: வீடியோ எடுத்து மிரட்டல்!!
Next post (PHOTOS) யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழ்க் குடும்பத்துடன் பலர்!!