குந்தி – பிபி இளம் காதல் ஜோடி தற்கொலை!!
Read Time:1 Minute, 19 Second
கான்பூரில் பெற்றோர்கள் தங்களது காதலை ஏற்றுகொள்ள மறுத்ததால் இளம் ஜோடி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
கான்பூரில் உள்ள கத்ரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் குந்தி (வயது 18). இவர் 25 வயதுடைய பிபின் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால் குந்தியின் பெற்றோர்கள் அவர்களது காதலை ஏற்க மறுத்தனர். இதனால் மனமுடைந்த குந்தி வீட்டில் உள்ள பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அரை மணி நேரத்தில் காதலி இல்லாத இந்த உலகத்தில் உயிர் வாழக்கூடாது என்று எண்ணி சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட காதலர்கள் பிணம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating