மட்டக்குளியில் ஒருவர் அடித்துக் கொலை: பெண் சுட்டுக் கொலை!!
Read Time:1 Minute, 11 Second
மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (12) அதிகாலை வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை நேற்று (11) இரவு ராவதாவத்த பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நபரின் மகன் தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண், நேற்று இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating