பொலிஸிடம் சிக்கிய த்ரிஷா!
Read Time:1 Minute, 14 Second
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நேற்றைய தினம் ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார் த்ரிஷா. ஜீன்ஸ், டீ சர்ட் , பெரிய கூலர்ஸும் அணிந்திருந்ததால், இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம்.
நீண்ட நேரமாக வி.ஐ.பி பயணிகள் விமானத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நின்றதால் பொலிஸார் சந்தேகப்பட்டு, அடையாள அட்டையை காண்பிக்க சொல்ல, பின்பு த்ரிஷா என்று தெரிந்ததும் பாதுகாப்பு கருதியே தாங்கள் இந்த விசாரணையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.
த்ரிஷாவும் இதை பெரிதுப் படுத்தாமல் ‘உங்கள் கடமையை தானே செய்தீர்கள்’ என்று சிரித்துக் கொண்டே சென்றாராம்.
Average Rating