இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற வயோதிப மாது கைது!!
Read Time:1 Minute, 2 Second
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தங்க நகைகளை எடுத்துச் செல்ல முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணிக்க தயாராகவிருந்த நிலையில் இப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 129 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 71,50,000 ரூபா என சுங்கம் தெரிவித்துள்ளது.
மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கம் மேற்கொண்டுள்ளது.
Average Rating