மெக்ஸிக்கோவில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வந்த 450 சிறுவர்கள் மீட்பு!!
மெக்ஸிக்கோவின் மிசோகன் மாநிலத்தில் சமோரா நகரிலுள்ள சிறுவர்கள் பராமரிப்பு நிலையமொன்றில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வந்த 450 க்கு மேற்பட்ட சிறுவர்களை அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மேற்படி, பிக் பமிலி சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளரான ரோஸா டெல்கார்மென் வொர்டுஸ்கோவும் 8 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் 271 சிறுவர்களும் 174 சிறுமிகளும் 3 வயதுக்கு கீழ்ப்பட்ட 6 பாலகர்களும் உள்ளடங்குகின்றனர். அதேசமயம் மேற்படி பிராந்தியத்தில் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்ட 138 வயது வந்தவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்படி, இல்லத்திலுள்ள தமது பிள்ளைகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் சினமடைந்த பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்தே குறிப்பிட்ட சிறுவர் பராமரிப்பு இல்லம் அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டது.
Average Rating