கணவனின் தாக்குதலில் மனைவி படுகாயம், தாய் பலி!!
Read Time:1 Minute, 5 Second
அனுராதபுரம் – தேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது மகளுடன் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, அங்கு வந்த இருவர் இவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதன்போது 48 வயதான பெண்ணொருவரே பலியாகியுள்ளதோடு, அவரது 28 வயதான மகள் படுகாயமடைந்துள்ளார்.
மேலும் குறித்த தாக்குதல் காயமடைந்துள்ள பெண்ணின் கணவர் உள்ளிட்ட இருவராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனினும் சந்தேகநபர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating