யாழில் வடமாகாண சபைக்கு எதிராக அநாமதய துண்டுபிரசுரங்கள்!!
Read Time:1 Minute, 5 Second
யாழில் வடமாகாண சபைக்கு எதிராக அநாமதய துண்டுபிரசுரங்கள் இன்று பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இத் துண்டு பிரசுரத்தில் ´எங்கள் இனத்தினைக் கொன்று குவித்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரித்த கூட்டமைப்பு ஓய்வுநிலை இராணுவ அதிகாரியை மீளவும் ஆளுநராக்கியதை எதிர்க்க என்ன அருகதை இருக்கின்றது´
மாகாண அரசே ! எம்மவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டால் மற்றவர்களை குறை காண்பது ஏன் ? ´குறை காண்பதை நிறுத்து. முடியாவிட்டால் இராஜினாமா செய்! என காணப்பட்டது.
இத் துண்டு பிரசுரங்கள் நேற்று இரவே ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating