பெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிப்பு: பெற்றோர் முற்றுகை-போலீஸ் குவிப்பு!!

Read Time:1 Minute, 53 Second

b3572b82-9974-4848-92c1-a4b7183cfe14_S_secvpfபெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் கடந்த திங்களன்று அடையாளம் தெரியாத நபர் 6 வயது மாணவியை கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டிருப்பதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பள்ளியை சேர்ந்த ஊழியர்கள் தான் இச்சம்பவத்தில் குற்றவாளிகள் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பெங்களூர் நகர கூடுதல் ஆணையளரான கமல் பந்த் கூறுகையில்:-

இந்த கற்பழிப்பு சம்பவம் பள்ளிக்குள் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அப்படி தான் புகார் கொடுத்துள்ளனர். தனது வகுப்பறையை விட்டு திங்களன்று காலை 11 மணியளவில் அம்மாணவி வெளியே வந்தபோது, யாரோ ஒரு நபர் மாணவியை பள்ளிக்கு வெளியே அழைத்துச்சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்ற மாணவி தனது பெற்றோரிடம் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக பந்த் கூறினார். பெற்றோரின் புகாரை பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிங்கள கடற்படை வீரர்: தமிழர்கள் கொந்தளிப்பு!!
Next post நடிகைக்கு அம்மா போட்ட புது கண்டிஷன்!