நடிகைக்கு அம்மா போட்ட புது கண்டிஷன்!
யாருடன் நடித்தாலும் அவர்களுடன் நட்புடன் பழகுபவர் கல் நடிகை. படப்பிடிப்பில் மட்டுமல்லாது, ஓட்டல் அறைகளிலும் பேசி பழகி தனது நட்பு வட்டாரத்தை பெருக்கி வருகிறார். இதற்கு அவரது தாய்க்குலமும் தாராளம் காட்டினார்.
சமீபத்தில் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற நடிகை, தனது சக நடிகருடன் ஓட்டல் அறையில் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அந்த ஓட்டலில் விபசாரம் நடப்பதாக ரெய்டு நடந்திருக்கிறது.
இவர்கள் இருந்த அறையில் நுழைந்த போலீசார் தனிமையில் இருந்த இருவர் மீதும் சந்தேகப்பட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்டு அங்கு விரைந்த தயாரிப்பாளர், இயக்குனர் போலீசாரிடம் இவர்கள் ஒரே படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை என விளக்கிக்கூற, அதன்பின்னரே அவர்களை கைது செய்யாமல் விட்டுவிட்டு சென்றுள்ளனர் போலீசார்.
இதனால், ரொம்பவும் அதிர்ச்சியடைந்த கல் நடிகையின் தாயார் இனிமேல் நடிகர்களோடு பழகுவதை படப்பிடிப்போடு நிறுத்திக் கொள் என கண்டிஷன் போட்டுள்ளாராம். நடிகையும் தாய்குலத்தின் கண்டிஷனுக்கு தலை சாய்த்திருப்பதாக கூறப்படுகிறது.
Average Rating