விபசார குற்றச்சாட்டிலிருந்து உடலியக்க மருத்துவ சிகிச்சையாளர்கள் விடுவிப்பு!!
Read Time:1 Minute, 0 Second
1958ஆம் ஆண்டிலிருந்து உடலியக்க மருத்துவ சிகிச்சை அளித்துவந்த கொள்ளுப்பிட்டியிலுள்ள உடலியக்க மருத்துவ நிலையத்தின் கட்புலன் இழந்த உரிமையாளரும் வேறு எட்டு பெண்களும் உடலியக்க மருத்துவ சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் விபச்சாரத்தை நடத்தினர் என்ற குற்றச்சாட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
ஓர் உண்மை கூட இல்லாமல் இந்த சுற்றிவளைப்பை தவறாக மேற்கொண்டுள்ளதாகவும் வழக்கு நடத்துனர் தரப்பு, இந்த வழக்கை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க் தவறிவிட்டதாகவும் தெரிவித்த நீதவான், வழக்கை தள்ளுப்படி செய்தார்.
Average Rating