3 மனைவிகள், 36 குழந்தைகள்: 4வது திருமணத்துக்குத் தயாராகும் நபர்!!

Read Time:2 Minute, 43 Second

Untitled-11பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள மலைவாழ் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஷார்கான். தற்போது இவருக்கு 54 வயது ஆகிறது.
இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். அவர்கள் மூலம் 36 குழந்தைகள் பெற்றுள்ளார். அதாவது ஒவ்வொரு மனைவிக்கும் தலா 12 குழந்தைகள் உள்ளனர்.

இருந்தும் அவருக்கு இல்வாழ்க்கையில் திருப்தி இல்லை என வருத்தப்படுகிறார். இன்னும் அதிக குழந்தைகள் பெற வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கு அவரது மனைவிகள் ஒத்துழைக்கவில்லை. நாங்கள் குழந்தை பெறும் ‘மெஷின்’ அல்ல என்று கூறி மறுத்து விட்டனர்.

மேலும் அவரை தங்கள் பக்கம் நெருங்க விடாமல் தடுத்து விட்டனர்.
இதனால் தனது வாழ்க்கையில் குல்ஷார் கான் பெரும் விரக்தி அடைந்து விட்டார். இஸ்லாமிய சட்டம் 4 மனைவிகள் வைத்து கொள்ள அனுமதி அளிக்கிறது.

எனவே மீண்டும் ஒரு பெண்ணை 4–வது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அதற்கான பெண் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வடக்கு வசிரிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது. அங்கு மறைந்திருக்கும் அவர்களை பாகிஸ்தான் இராணுவம் குண்டு வீசி அழிக்கிறது. எனவே அங்கு தங்கியிருக்கும் மக்கள் பான்னு பகுதிக்கு இடம் பெயரும்படி கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.

அதனால் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர். குஷ்ஷார் கானும் தனது 3 மனைவிகள் மற்றும் 36 குழந்தைகளுடன் ஷாவா என்ற இடத்தில் இருந்து பான்னுவுக்கு குடிபெயர இருக்கிறார்.

குல்ஷார் கானுக்கு முதன் முறையாக 17 வயதில் திருமணம் நடந்தது. அப்போது ஷாவாவில் 14 வயது உறவுக்கார பெண்ணை மணந்தார். அவர்களுக்கு 8 மகள்கள், 4 மகன்கள் உள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு 17 வயது பெண்ணையும், அதை தொடர்ந்து மற்றொரு பெண்ணையும் மணந்து குழந்தைகளை பெற்றார். தற்போது 4–வது திருமணத்துக்கு பெண் தேடுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த்ரிஷா என்ன இப்படிக் கூறிவிட்டார்?
Next post கவர்ச்சி காட்டத் தயங்க மாட்டேன் – மார்தட்டும் நடிகை!!