மாணவியைக் கடத்திய பெரியம்மாவின் மகன்!!
Read Time:55 Second
பாடசாலை விட்டு வீடு திரும்பிய 16 வயதுடைய மாணவி ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் சிலாபம் – வில்பத பகுதியில் வேன் ஒன்றில் வந்தே சிறுமியைக் கடத்தியுள்ளனர்.
சிறுமியை கடத்திச் சென்றது அவரது தாயின் அக்காவின் மகன் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மற்றும் கடத்தப்பட்ட சிறுமியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பல்லம பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating