ஆசை மிகுதியால் கட்டிப்பிடி வைத்தியத்தில் 14 மாத குழந்தையை கொன்றவர் கைது!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்ச்பர்க் பகுதியை சேர்ந்தவர், ராபர்ட் கெம்ப் (27). கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்ற இவர், அங்கு இருந்த 14 மாத ஆண் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
விளையாட்டுக்கு இடையில் அந்த குழந்தை லேசாக கண்களை கசக்கியதால், அது உறங்க நினைக்கின்றது என்பதை புரிந்துக் கொண்ட ராபர்ட் குழந்தையை கட்டியணைத்து உறங்க வைத்து, வீட்டில் இருந்த மரத் தொட்டிலில் கிடத்தினார்.
சற்று நேரம் கழித்து, குழந்தை நன்றாக உறங்குகிறதா? என்பதை பார்க்க சென்ற அவர், அது மூச்சு திணறி உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதைக் கண்டு துடித்துப் போனார். வீட்டில் இருந்த மற்றொரு நபர் அந்த குழந்தையின் வாயில் வாய் வைத்து செயற்கை சுவாசம் மூலம் உயிர்ப்பிக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்காததால், சில வினாடிகளுக்குள் அது உயிரிழந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, தற்போது குழந்தையின் தாய் அளித்த புகாரையடுத்து ஆரஞ்ச்பர்க் போலீசார், ராபர்ட் கெம்ப்-பை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
குழந்தையின் மரணத்துக்கு நான் தான் காரணம் என்றால்… சுமார் ஓராண்டு கழித்து புகார் அளிக்கப்பட்டது ஏன்? என்று அப்பகுதி ஷரீப்-பிடம் கேள்வி எழுப்பிய ராபர்ட் கெம்ப், 10 ஆயிரம் டாலர்களை செலுத்தி ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
Average Rating