செய்யாறு அருகே மனைவியை கொன்று உடலை எரித்த கணவர் கைது!!

Read Time:2 Minute, 3 Second

89b5f6ed-97f7-4a61-aad2-623fc6bb2525_S_secvpfதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் காந்தி சாலையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30), இவருக்கும் சென்னை மண்ணடியை சேர்ந்த ஜெயந்திக்கும் (25) கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஏ.சி.மெக்கானிக்கான பாலாஜி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் – மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பாலாஜி, மனைவி ஜெயந்தியை அரிவாள் மனையால் வெட்டினார். இதில் ஜெயந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மனைவி ஜெயந்தியை வெட்டி கொலை செய்ததை மறைப்பதற்காக ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டது போன்று அவருடைய உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்துள்ளார்.

பின்னர் ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டோமே என்று துடித்த பாலாஜி செய்யாறு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 குழந்தைகளும் தாயின் உடலை பார்த்து கதறி அழுதது அங்குள்ளவர்களை கண்கலங்க செய்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச எஸ்.எம்.எஸ்.விவகாரம்: புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 3 பேர் கைது!!
Next post வசீகர குரலால் பெண்ணாக நடித்து இளைஞரை காதலிக்க வைத்த ஆண்!!