மகனுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க ஆசைப்பட்ட நடிகை!!

Read Time:2 Minute, 40 Second

Untitled-14எனக்கும், என் மகனுக்கும் உதட்டுடன் உதடு பதித்து முத்தமிடும் காட்சியை வையுங்கள் என்று ஒரு நாடக நடிகை, நாடக இயக்குநரான தனது கணவரிடம் வேண்டுகோள் வைத்து புரட்சி செய்துள்ளார் கொல்கத்தாவில்.

இந்த நாடகத்தில் தாயும் மகனும் காதலர்களாக வேறு வருகிறார்களாம். இப்படி தாயும், மகனும் ஜோடி போட்டு நடித்ததாக இதுவரை எங்குமே கேள்விப்பட்டதில்லை என்பதால் கொல்கத்தாவே பரபரப்பாகியுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த நாடக இயக்குநர் கெளசிக் சென். இவர் சையத் முஜ்தபா அலி என்பவருடைய சச்சா கஹினி என்ற சிறுகதையிலிருந்து ஒரு நாடகத்தை உருவாக்கியுள்ளார்.

இதில்தான் ஒரு பகுதியில் கெளசிக்கின் ரித்தி சென் மற்றும் மனைவி ரேஷ்மி சென் ஆகியோர் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

கதைப்படி இளம் சச்சா கேரக்டரில் ரித்தி நடிக்கிறார். அவரது வயது முதிர்ந்த காதலியாக அவரது தாயார் ரேஷ்மி வருகிறார்.

இந்த கதையில் பணமே குறிக்கோள், பாசம், காதல் எல்லாம் சும்மா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மி வருகிறாராம்.

காதலன் காசில் நன்றாக சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, பொழுதைக் கழிப்பதுதான் இந்த கதாபாத்திரத்தின் முக்கிய அம்சங்களாம்.

இந்த நாடகம் குறித்து ரித்தி கூறுகையில், எனது தாயாருடன் ஜோடியாக நடிப்பது ஆச்சரியமாகவும், ஜாலியாகவும் இருக்கிறது. எங்களது வீ்ட்டிலேயே மிகவும் சிறந்த நடிப்பாளர் எனது தாயார்தான்.

அதற்கும் மேலாக அவர்தான் எனது முதல் காதல். எனவே நாடகத்திலும் நாங்கள் சிறப்பாக நடித்துள்ளோம் என்கிறார்.

தாயார் ரேஷ்மியோ ஒரு படி மேலே போயுள்ளார். அவர் கூறுகையில், இந்த நாடகத்தில் எனக்கும், ரித்திக்கும் இடையே லிப்லாக் காட்சி வையுங்கள் என்று நான் இயக்குநரிடம் கேட்டேன். அவர் வேண்டாம் என்று கூறி விட்டார் என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பைத்தியமாக்கும் காதல்!!
Next post உதயநிதி தற்கொலை விவகாரம் – உண்மை என்ன?