வண்ணாரப்பேட்டையில் பள்ளி மாணவி மானபங்கம்: கார் டிரைவர் கைது!!

Read Time:1 Minute, 50 Second

378e30c5-fc07-4dbd-9dd4-a865da05d862_S_secvpfவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மகள் லிசா (15 பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள ஒரு பள்ளியில் 11–வது வகுப்பு படித்து வந்தார்.

மாணவியை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகரன் (20) என்பவர் காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து கொண்டனர்.

இந்த நிலையில் மாணவி லிசா தண்டையார் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:–

நான் இங்குள்ள ஒரு பள்ளியில் 11–வது வகுப்பு படித்து வருகிறேன். என்னை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும் நான் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது என்றும் ராஜசேரகன் கூறினார். என்னை திருமணம் செய்வதாகவும் கூறினார்.

இதை நம்பி நான் ராஜசேகருடன் பழகினேன். தனிமையிலும் சந்தித்தோம். அப்போது திருமண ஆசை காட்டி என்னை மானபங்கம் செய்து விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமா, சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவர் ராஜசேகரனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பான் மூளையழற்சி நோய்க்கு இந்தியாவில் 47 பேர் பலி!!
Next post குடும்ப தகராறில் தீ குளித்த பெண்: காப்பாற்ற சென்ற கணவரும் உடல் கருகினார்!!