பெங்களூரில் மேலும் ஒரு பள்ளி மாணவன் பலாத்காரம்: ஆசிரியர் கைது!!

Read Time:2 Minute, 9 Second

7730300Tamil3பெங்களூருவில் உயர்நிலைப் பள்ளிச் சிறுவன் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் 28 வயது ஆசிரியர் ஒருவரை ராமநகர் பொலிஸார் கைது செய்தனர்.

தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 6 மாதங்களாக ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அலெக்ஸ் ஆன்டனி சுவாமி. உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் பள்ளியிலேயே சிறப்பு வகுப்புகள் நடப்பது வழக்கம்.

சில நேரங்களில், மாணவர்கள் இரவில் தூங்கிவிட்டு, அதிகாலை வீடு திரும்புவதும் நடக்கும். அதேபோல், வியாழக்கிழமை இரவு தங்கிய சிறுவனை ஆசிரியர் ஆன்டனி சுவாமி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுபற்றிய தகவலை, தமது பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட சிறுவன் விவரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியரின் வீட்டை முற்றுகையிட்ட மாணவனின் பெற்றோரும், உறவினர்களும், சுவாமியை கட்டிப் போட்டு அடித்த பிறகு, பொலிஸிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து, சிறார் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சுவாமி மீது வழக்குப் பதிவு செய்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, பெங்களூரில் 6 வயது மாணவி பள்ளி ஊழியர்களால் பலாத்காரம் செய்ய‌ப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது அந்த சுவடு மறைவதற்குள் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ’காதல்’ தண்டபானி மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!!
Next post வேறு பெண்ணுடன் தொடர்பு: கணவரை கண்டித்த பெண்ணுக்கு அடி–உதை!!