வேறு பெண்ணுடன் தொடர்பு: கணவரை கண்டித்த பெண்ணுக்கு அடி–உதை!!

Read Time:2 Minute, 1 Second

512f6179-1b79-4355-a0ed-6f11a8c427e4_S_secvpfவேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல் சரகம், மருதூர் தெற்கு சேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் காரியப்பன். இவரது மனைவி பொற்செல்வி (35). இவர் இரண்டு மகன்கள், கணவர், மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் காரியப்பன் மருதூர் வடக்கு கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த சங்கத்தில் வேலை பார்த்து வரும் பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மனைவி பொற்செல்வி தனது கணவரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த காரியப்பன், அவரது சகோதரி வைரம் (40), மைத்துனர் நமசிவாயம் (51), மைத்துனர் மகன் சரவணமுத்து (29) ஆகிய நால்வரும் சேர்ந்து பொற்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி, கழுத்தை பிடித்து நெரித்து, அடித்து, கம்பியை காட்டி மிரட்டினார்களாம். இதில் பாதிக்கப்பட்ட பொற்செல்வி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து நாத்தனார் வைரம் (40), அவரது கணவர் நமசிவாயம், அவரது மகன் சரவணமுத்து ஆகிய மூவரையும் கைது செய்து வேதாரண்யம் கோர்டில் ஆஜர் செய்தார். மேலும் தலைமறைவான பொற்செல்வியின் கணவர் காரியப்பனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூரில் மேலும் ஒரு பள்ளி மாணவன் பலாத்காரம்: ஆசிரியர் கைது!!
Next post தேனிலவு தம்பதிகளை வரவேற்க தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா!!