சென்னை ரெயிலில் பெண் துறவி மாயம் கதி என்ன?: போலீஸ் விசாரணை!!

Read Time:1 Minute, 39 Second

63a3d72e-ef81-4af8-9d93-93e0ae7f572b_S_secvpfதிருச்சி தொட்டியம் அருகே ஸ்ரீலலிதா மகிளா சமாஜம் உள்ளது. இங்கு பெண் துறவியாக இருந்து வருபவர் விமலாம்பா (26). ஆசிரமத்திலேயே வளர்ந்து துறவு பணியில் தீவிர பற்றுடன் செயல்பட்டு வந்தவர்.

குஜராத்தில் உள்ள புஜ் ஆசிரமத்துக்கு செல்வதற்காக குளித்தலையில் இருந்து பெண் துறவிகளுடன் விமலாம்பா, மங்களூர் எக்ஸ் பிரஸ் ரெயிலில் சென்னை வந்துள்ளார்.

இரவு 12 மணி வரை அனைவரும் ரெயிலில் பேசிக்கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணிக்கு மற்ற துறவிகள் எழுந்து பார்த்தபோது விமலாம்பாவை காணவில்லை.

விழுப்புரம்– விருத்தாசலம் இடையேதான் விமலாம்பா காணாமல் போயிருக்கிறார். அவரது உடமைகள், செல்போன் எல்லாம் ரெயிலில் இருந்தது.

எனவே கழிவறை செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததா? அவரது கதி என்ன? என்று ஆசிரமத்தில் உள்ள துறவிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுபற்றி ஆசிரமத்தின் துணைத் தலைவர் சாம்பவி வித்யாம்பா எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன துறவி விமலாம்பாவை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனிலவு தம்பதிகளை வரவேற்க தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா!!
Next post வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை கல்லால் அடித்துக் கொன்ற முதியவர்!!