புதுக்குடியிருப்பில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!
Read Time:1 Minute, 4 Second
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – மந்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டு சமையல் அறையில் தூக்கிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
உயிரிழந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரது முதற் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating