சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவரை தண்டிக்கவும்! ம.தொ.ச!!!!
இறக்குவானை – டெல்வின் தோட்ட பி பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய, சந்தேகநபரை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மக்கள் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுப்பதுடன், அச்சமூக விரோத குற்றச்செயலை வன்மையாக கண்டிக்கிறது.
தோட்டத் தொழிலாளர் வர்க்க அல்லது மலையகத் தமிழ் குடும்ப பெண்களும், சிறுமிகளும் இலகுவாக இவ்வாறான குற்றச் செயல்களுக்குள்ளாக்கப்படுவதுடன், அவர்கள் மீது குற்றச் செயல்களை புரிந்தவர்கள் இலகுவாக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுகின்றனர். இந்நிலைமையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.
அதேவேளை டெல்வின் தோட்டச் சிறுமிக்கு ஏற்பட்ட துன்பியல் சம்பவத்தை அனைத்து தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் எதிர்த்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளி தண்டிக்கப்படவும் நேர்மையான செயல்களில் ஈடுபட வேண்டும் எனவும் மக்கள் தொழிலாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating