பாக்: நான்கு பெண்கள் மீது அசீட் வீச்சு!!
பாகிஸ்தானில் நான்கு பெண்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசீடை வீசியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பாகிஸ்தானில் குவெட்டா நகரில் சரியப் ரோட்டில் பரபரப்பாக இயங்கும் மார்க்கெட் உள்ளது. இங்கு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் தாங்கிய மர்மநபர்கள் வந்தனர். அவர்களில் 2 பேர் முகத்தை துணியால் மூடி மறைத்து இருந்தனர்.
பின்னர் அக்கும்பல் ஒரு நகை கடைக்குள் புகுந்தது. அங்கு இருந்த பெண்கள் மீது ஊசியில் நிரப்பப்பட்டிருந்த ஆசிட்டை (அமிலத்தை) பீய்ச்சி அடித்தனர். அதில் 4 பெண்கள் காயம் அடைந்தனர்.
அவர்களில் 2 பேருக்கு கைகளிலும், 2 பேருக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியது ஏன் என தெரியவில்லை. அவர்களுக்கும், தங்களுக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating