கொடுங்கையூரில் கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படம் விற்பனை: செல்போன் கடை உரிமையாளர் கைது!!

Read Time:3 Minute, 1 Second

e2aefc23-30c9-44dc-bb05-f3a7714aaed0_S_secvpfசெல்போன் கடைகளில் புதிய தமிழ் படங்களையும், ஆபாச படங்களையும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்பவர்களை முற்றிலும் ஒழிக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டு இருந்தார்.

பென்டிரைவ் மற்றும் மெமறிகார்டில் காப்பி செய்தும், சி.டி.க்களாக பதிவிறக்கும் செய்து விற்பனை செய்பவர்களை முற்றிலுமாக ஒழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடந்த சில சென்னையில் உள்ள மொபைல் சென்டர்களை கண்காணித்து மத்திய குற்றப்பிரிவு, திருட்டு வீடியோ தடுப்பு பிரிவினர் கைது செய்து வருகிறார்கள்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் கணபதி (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர் வேலன் சுப்பிரமணி மற்றும் தனிப்படையினர் வியாசர்பாடி, சர்மாநகர், கொடுங்கையூர் பகுதிகளில் அதிரடி வேட்டைகள் நடத்தினர்.

அப்போது கொடுங்கையூர் காமராஜர் சாலையில் கடை வைத்து நடத்திய முக்கிய குற்றவாளி விஜய் என்கிற விஜயகுமார் (32) சிக்கினார். அவர் பென்டிரைவ் மற்றும் மெமரிகார்டு மூலம் சமீபத்தில் திரைக்கு வந்த புதிய தமிழ்படங்களான வேலை இல்லா பட்டதாரி, அதிதி, அரிமாநம்பி, மஞ்சப்பை, சைவம் ஆங்கிலப் படங்களையும் மற்றும் ஆபாச படங்களையும் இணையதளத்-தில் இருந்து பதவிறக்கம் செய்து பொதுமக்களுக்கு காப்பி செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே விஜய் என்கிற விஜயகுமார் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் இத்தொழிலுக்கு பயன்படுத்திய மானிடர், பிரிண்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம்.

சென்னை நகரிலும் புறநகல் பகுதியிலும் இதேபோன்று மொபைல் சென்டர்களில் இணையதளத்திலிருந்து பென்டிரைவ், மெமரிகார்டு மூலம் மற்றும் சிடிக்களிலும் காப்பி பண்ணி விற்பனை செய்பவர்களையும் தயாரிப்பவர்களையும் பிடிக்க தனிப்படை முடிக்கி விடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அயர்லாந்தில் 9 வயது தம்பியை குத்திக் கொன்ற வாலிபர் தூக்கிட்டு இறந்த பரிதாபம்!!
Next post காசிமேட்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை!!