15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் தப்பி ஓட்டம்!!
பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புத்தளம், முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளம், முக்குதொடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தை சாரதியாக தொழில் செய்வதாகவும், அவர் வெளியிடங்களுக்குச் சென்று தொழில் செய்வதாகவும், சிறுமி தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று சிறுமி அவசர தேவைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றவேளை குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபர் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர் என பொலிஸாரது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை
முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating