பிரபல நடிகை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார்!!

Read Time:1 Minute, 39 Second

298271179Untitled-1‘உள்ளத்தை அள்ளித் தா’, ‘காதலா, காதலா’ உள்ளிட்ட பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்பா மீது ஐதராபாத் பொலிசார் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரம்பாவின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் ராவ் என்பவரை கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஐதராபாத்தை சேர்ந்த பல்லவி என்ற பெண், ‘எனது கணவரும் அவரது உறவினர்களும் எனது பெற்றோரிடம் இருந்து அதிக வரதட்சணை வாங்கி வரும்படி வற்புறுத்தி என்னை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

எனது புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி பொலிசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத் கோர்ட்டில் பல்லவி மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, கோர்ட் உத்தரவின்படி, ஸ்ரீனிவாஸ் ராவ், அவரது சகோதரி நடிகை ரம்பா மற்றும் சிலர் மீது வரதட்சணை கொடுமை (தடுப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்த பொலிசார், பல்லவியின் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்களை ஆராய்ந்து வருவதாகவும், மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர் துஷ்பிரயோகம் – மூன்று மாநிலங்களுக்கு நோட்டீஸ்!!
Next post அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு: மருத்துவமனை சீருடையில் வந்த ஆசாமிக்கு வலை!!