மருமகனுடன் சேர்ந்து கணவரை எரித்து கொன்ற மனைவி!!

Read Time:1 Minute, 32 Second

816cd374-09f0-44fc-b03e-55e551052e81_S_secvpfநாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருமஞ்சனவீதி, ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணி பூ வியாபாரி. இவரது மனைவி மாரியம்மாள். நேற்று மதியம் கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மாரியம்மாள் ஆத்திரம் அடைந்தார். மருமகன் சந்திரசேகருடன் இணைந்து கணவர் மணி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதில் அவரது உடல் கருகியது. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் மணி வாக்குமூலம் அளிக்கும்போது மனைவியும், மருமகனும் சேர்ந்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்ததாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

இதனைதொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் மாரியம்மாள், அவரது மருமகன் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். கணவரை மனைவியே எரித்து கொன்ற சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேதாரண்யம் அருகே காதல் திருமண ஜோடி உண்ணாவிரதம்!!
Next post அரூர் அருகே சமையல் செய்த போது தீயில் கருகி பெண் பலி!!