சுனாமி புரளியால் மாரடைப்பில் பெண் பலி!!
Read Time:1 Minute, 13 Second
பிலின்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்குப் பகுதியான கான்டெலரியா என்ற ஊரில் சுனாமி ஏற்படப் போவதாக பரவிய புரளியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
இந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் ஒருவர் பலியானார்.
பிலிப்பைன்சிஸில் மட்மோ புயலால் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், சுனாமி புரளி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.
வீடுகளை விட்டு அனைவரும் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர். சுனாமி வராததாலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று உள்ளூர் நிர்வாகம் அறிவித்ததாலும் மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
இந்த புரளி எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.
Average Rating