குடியாத்தம் பஸ்சில் வந்த ராணுவ வீரர் மனைவியிடம் நகை,பணம் அபேஸ்!!
Read Time:1 Minute, 14 Second
அணைக்கட்டு அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாரதி. ராணுவவீரர். இவரது மனைவி சங்கீதா(வயது28). இவரது தாய் வீடு குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தில் உள்ளது.
இந்நிலையில் சங்கீதா நேற்று அக்ராவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல ஒடுகத்தூரில் இருந்து பைகள் மற்றும் குழந்தைகளுடன் பஸ் ஏறினார். குடியாத்தம் பஸ் நிலையத்தில் இறங்கும்போது அவர் வைத்திருந்த ஒரு பையை காணவில்லை. அந்த பையில் 2 பவுன் நகை, ரூ.8 ஆயிரம் பணம், 2 ஏ.டி.எம் கார்டு ஆகியவை இருந்தது. யாரோ மர்மநபர் பையுடன் அவற்றை திருடிச் சென்றுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சங்கீதா குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து நகை, பணம் அடங்கிய பையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.
Average Rating