ஈராக்கில் பெண் உறுப்பை சிதைக்க உத்தரவிட்டுள்ள போராளிகள்!!

Read Time:1 Minute, 38 Second

1046510301Untitled-1கடந்த மாதம் ஈராக்கின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஜிஹாதிப் போராளிகள் இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அங்கு தீவிர இஸ்லாமிய சலாபிஸ்ட் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

போரினால் பாதிப்படைந்துள்ள இந்த நாட்டில் வாழும் 11 வயதிலிருந்து 46 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவருக்கும் பெண் உறுப்பு சிதைப்பை சமய அரசாணையாக இந்த இயக்கம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

தென்னாபிரிக்க நாடுகளில் பரவலாகக் காணப்படும் இந்த சம்பவம் ஈராக்கில் அசாதாரணமானதாகக் கருதப்படுகின்றது. நாட்டின் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகளில்தான் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது என்று ஈராக்கில் பணிபுரியும் ஐ.நா.வின் இரண்டாவது மூத்த அதிகாரியான ஜாக்குலின் பட்காக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை தெரியவந்துள்ள இந்த ஆணையால் நான்கு மில்லியனுக்கும் மேலான பெண்களும், சிறுமிகளும் பாதிக்கப்படுவார்கள். எனினும் இதுகுறித்த துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை என்று அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலை எதிர்த்த சகோதரனை காதலன் மூலமே கொன்ற பெண்!!
Next post இங்கிலாந்து குட்டி இளவரசர் 18வது வயதில் எப்படி இருப்பார்?