அல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது!!
Read Time:1 Minute, 12 Second
ஆப்ரிக்கா நாடான அல்ஜீரியாவின் பயணிகள் விமானம், பர்கினோ பாசோவின் தலைநகரான உகடகுவாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை காலை புறப்பட்டது.
அடுத்த 50வது நிமிடத்தில் மாலி நாட்டின் வான்வெளியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது.
விமானத்தில் 110 பயணிகளும், 6 சிப்பந்திகளும் இருந்தனர். இந்த விமானம் மாலி நாட்டின் வடபகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கி கிடந்தது.
இங்கு பிரான்ஸ் இராணுவத்தின் தலைமையில் மீட்பு பணி நடக்கிறது. இடிபாடுகளில் இருந்து விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி தெரிவித்துள்ளார்.
Average Rating