ராஜஸ்தானில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்த காமுக ஆசிரியர் கைது!!

Read Time:1 Minute, 41 Second

10ராஜஸ்தான் மாநிலம் பிகானர் அருகே உள்ள காஜ்நர் என்ற பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவர் ஒருவர் தனது பெற்றோரிடம் கூறியதால் இன்று சஞ்சய் சர்மா என்ற ஆசிரியரை நையப்புடைத்த பெற்றோர், அவனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவன் மீது செக்ஸ புகார் எழுப்பப்படுவது இது முதன் முறையல்ல. ஏற்கனவே கடந்த 21ந் தேதி அவர் மீது புகார் கூறப்பட்டபோது போலீசார் முன்னிலையில் மன்னிப்பு கேட்டதால் விடுவிக்கப்பட்டான். ஆனால் அவன் வேலையை விட்டு நீக்கப்பட்டதாக பிகானர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் கால்கே கூறினார்.

இந்நிலையில் இன்று காலை தனது பேரன் உள்பட சில மாணவர்களை அங்குள்ள ஏரிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அவனது தாத்தா அளித்த புகாரின் பேரில் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான். அதன் பின்னர் அந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக 6 மாணவர்கள் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியூயார்க் மகிழ்ச்சியான நகரம் அல்ல!!
Next post காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா!!