மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி!!

Read Time:1 Minute, 45 Second

826f6ac7-2a09-4573-a56c-7e49f6aa23ac_S_secvpfதர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அமனி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 33). இவர் பெங்களுரில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சஞ்சீவிராணி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மனைவி கணவரிடம் கோபித்துக் கொண்டு செக்கு மெடு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

பெங்களுரில் இருந்து நேற்று முன்தினம் மனைவி வீட்டுக்கு வந்த வேலு தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். மேலும் அவரும். அவரது தாயாரும் சேர்ந்து அவரை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் மறுநாள் வரச்சொன்னார்கள்.

மீண்டும் மனைவி வீட்டுக்கு சென்று அவரை அழைத்த போது அவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த அவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கு பெறும் மும்பை தடகள வீராங்கனை!!
Next post கொல்கத்தாவில் ஆபாச படம் எடுத்து மிரட்டி ரெயில்வே பெண் ஊழியரை கற்பழித்த சக ஊழியர்கள்!!