கொல்கத்தாவில் ஆபாச படம் எடுத்து மிரட்டி ரெயில்வே பெண் ஊழியரை கற்பழித்த சக ஊழியர்கள்!!

Read Time:1 Minute, 54 Second

7d7f85e2-7211-4685-8f8f-ca82425815a4_S_secvpfகொல்கத்தாவில் ரெயில்வே துறையில் வேலைப்பார்க்கும் பெண் ஊழியரை, அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் கற்பழித்துள்ளனர். மேலும், இந்த தகவலை வெளியில் சொன்னால் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் திருமணமானவர். அவர் ஒரு டிவி நிகழ்ச்சியில் இந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் நான்கு பேர், சித்பூர் யார்டில் வைத்து பல நாட்கள் என்னை கற்பழித்தனர். மேலும், அவர்கள் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னுடைய ஆபாச படங்களை இண்டர்நெட்டில் வெளியிட்டு உன்னை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள் என்று கூறினார்.

இதுகுறித்து நேற்று அவர் தும்தும் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். 2010-ம் ஆண்டு கியானேஸ்வரி ரெயில் விபத்தில் தன் கணவர் பலியானதால், கருணை அடிப்படையில் ரெயில்வேயில் தனக்கு வேலை கிடைத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

“இது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. நாங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். அந்த நான்கு பேரையும் தேடி வருகிறோம். அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி!!
Next post ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் சிம்புவின் வாலு!!