(PHOTOS) யாழ் மாவட்டத்தில் தனியார் வானொலி ஒன்று நடாத்திய நிகழ்வு ஒன்றில் அரை நிர்வாணமாக பெண்கள்!!
யாழ் மாவட்டத்தில் தனியார் வானொலி ஒன்று நடாத்திய நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற குத்தாட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.
நேற்று மாலை யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அவ்வானொலியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரமாண்டமான நிகழ்வு ஒன்றினை முன்னெடுத்திருந்தது.
இதில் உள்நாட்டு,தென்னிந்திய கலைஞர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இதில் அரை நிர்வாணமாக பெண்கள் குத்தாட்டங்களை ஆடியிருந்தனர்.
ஆனால் மேற்படி வானொலி தனது வழமையான நிகழ்ச்சியில் கலாச்சாரம்,பண்பாடு என கூறிக்கொண்டு நிமிடத்துக்கு நிமிடம் நிகழ்வுகளில் நேயர்களை அறிவூட்டுவது வழமை.எனினும் நேற்றைய நிகழ்வு காரணமாக அவ்வானொலியின் சுயருபம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
மக்களில் பலர் ஏனையவர்கள் இவ்வாறான நிகழ்வினை முன்னெடுத்தால் கலாச்சார சீர்கேடு என குடுநாட்டு ஊடகங்கள் தூக்கி பிடித்து எழுதுகின்றன.ஆனால் இவ்வானொலி நிகழ்வு தொடர்பில் மௌனம் சாதித்து வருகின்றன.
இது தவிர இந்நிகழ்வில் சாதாரணமாக ஆண்,பெண் ஓடிப்பிடித்து இரவில் விளையாடி .அது வினையாகி பொலிஸ் வரை சென்றமை இவ்வானொலி அறியவில்லை என்னவோ.
கலாச்சாரம் பாதுகாக்க மக்கள் மத்தியில் ஒளியேற்ற இவ்வாறான நிகழ்வகளை நடாத்துகின்றோம் என கூறி மேற்படி நிகழ்வு நடைபெற துணை போகின்றமை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவர்களது பிறந்த நாள் நிகழ்வு தொடர்பிர் சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Average Rating