திருப்பதியில் பிணமாக கிடந்த பெண் திருவண்ணாமலையை சேர்ந்தவர்!!

Read Time:1 Minute, 49 Second

6daf944c-c351-4664-9fa3-f0ce4bf19cde_S_secvpfதிருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையான் தரிசனத்துக்கு செல்லும் 2–வது கியூ காம்ப்ளக்சில் 16–வது அறையில் உள்ள கழிவறையில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சுயநினைவின்றி கிடந்தார். கழிவறையை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் இதனை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அந்த பெண் வைத்திருந்த செல்போன் மூலம் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூ வியாபாரி என்பது தெரியவந்துள்ளது. 2 பெண்களுடன் அவர் திருப்பதி வந்துள்ளார். அந்த பெண்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. மூதாட்டியின் உறவினர்கள் வந்த பிறகுதான் மேல் விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

விஜயவாடாவைச் சேர்ந்தவர் பாபுஜி (66). குடும்பத்தினருடன் திருப்பதி வந்த இவர் வாடகைக்கு அறை எடுக்க தகவல் மையத்தில் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுருண்டு விழுந்த அவரை அஸ்வினி ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்ப தகராறு: டெய்லர் தற்கொலை!!
Next post 3 வயது சிறுவனை அடித்து உதைத்த சம்பவம்: தலைமறைவான ஆசிரியை கைது!!