3 வயது சிறுவனை அடித்து உதைத்த சம்பவம்: தலைமறைவான ஆசிரியை கைது!!
கொல்கத்தா அருகே உள்ள லேக் டவுன் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 3 வயது சிறுவனுக்கு டியூசன் சொல்லி கொடுப்பதற்காக பூஜா சிங் என்ற ஆசிரியை ஒருவரை நியமித்தார். அவர் தினமும் வீட்டுக்கு வந்து டியூசன் சொல்லி கொடுத்து வந்தார். கடந்த புதன்கிழமை அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது சிறுவன் குறும்பு செய்ததாக தெரிகிறது.
ஆத்திரம் அடைந்த ஆசிரியை சிறுவனை எட்டி உதைத்தும், கட்டிலில் தூக்கிப் போட்டும் பலமாக தாக்கினார். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறினான். இதனையடுத்து அவனது பெற்றோர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சிகள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தலைமறைவான பூஜாசிங்கை நேற்றுமுன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, பூஜாசிங்கை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
Average Rating