காதலன் உட்பட 6 பேரால் சிறுமி பலாத்காரம்: உப்புவெளியில் கொடூரம்!!
சிறுமி ஒருவரை குழுவாக இணைந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் நால்வர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் – முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
உப்புவெளி பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி உப்புவெளியைச் சேர்ந்த 17 வயதானவர் என தெரியவந்துள்ளது.
தான் தனது காதலனை சந்திப்பதற்காக சிகை அலங்கார நிலையத்திற்குச் சென்றவேளை தனது காதலன் உட்பட ஆறு பேரால் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மீன்பிடி தொழிலுக்காக முல்லைத்தீவு சென்று மீண்டும் உடப்பு பிரதேசத்திற்கு திரும்பியவேளை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முந்தல் பொலிஸ் பொறுப்பதிகாரி லலித் சந்தசிரி உள்ளிட்ட பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
Average Rating