தொண்டையில் புரோட்டா சிக்கி இளம்பெண் பலி!!
Read Time:1 Minute, 5 Second
கரூர் மாவட்டம், குளித்தலை கரையம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் மகள் ராதிகா(17). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைக்கு சென்றார்.
அங்குள்ள விடுதியில் தங்கி மில் வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று இரவு உணவாக புரோட்டா சாப்பிட்டார். அப்போது தொண்டையில் சிக்கியதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
தண்ணீர் மற்றும் குளிர்பானம் குடித்தும் நிற்கவில்லை.
வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது பெற்றோருக்கு மில் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating