முன்விரோதத்தில் வியாபாரியின் காதை கடித்து துப்பிய தந்தை-மகன் கைது!!
Read Time:1 Minute, 22 Second
திண்டுக்கல் அருகில் உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த ராமர் மகன் அய்யனார்(55). இவருக்கும், திண்டுக்கல் தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள்(57) என்பவருக்கும் அங்குள்ள முத்தலாம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது.
சம்பவத்தன்று அய்யனார் வந்து கொண்டு இருந்தபோது அங்கு வந்த பெருமாள் மற்றும் அவரது மகன் மருதமுத்து இனிமேல் நீ கோவிலுக்கு வரக்கூடாது என்று தகராறு செய்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
ஆத்திரம் அடைந்த பெருமாள் மற்றும் அவரது மகன் அய்யனாரின் காதை கடித்து துப்பினர். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை மற்றும் மகனை கைது செய்தனர்.
Average Rating