நித்யானந்தாவை கைது செய்து, ஆண்மை பரிசோதனைக்கு உத்தரவு!!

Read Time:2 Minute, 30 Second

1980136174nithy (1)பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிடதி பொலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று ராமநகர் நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. இதை எதிர்த்து நித்யானந்தா சாமியார் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 16-ந் திகதி அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் 28-ந் திகதி (அதாவது நேற்று) நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், நித்யானந்தா சாமியார் மீதான வழக்கு ராமநகர் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி ஒசகவுடர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நித்தியானந்தா சாமியார் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அத்துடன் ஐகோர்ட்டு உத்தரவுப்படி அவருக்கு ஆண்மை பரிசோதனையும் நடக்கவில்லை. இதுதொடர்பாக நித்யானந்தா சாமியார் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் விளக்கம் அளித்தனர். அதை நீதிபதி ஒசகவுடர் ஏற்கவில்லை.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகாத நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர இயலாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 7-ந் திகதிக்குள் நித்யானந்தாவை கைது செய்து, ஆண்மை பரிசோதனை செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ​பெயரை மாற்றும் நாயகிகள்..!!
Next post மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு புதுவழி!!