10ம் வகுப்பு மாணவி துப்பாக்கி முனை 5 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்!!
வடக்கு டெல்லியில் உள்ள உத்தம் நகரில் இரண்டு மைனர் உள்பட 5 பேர் துப்பாக்கி முனையில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19-ந் திகதி அந்த மாணவி பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது, அவருக்கு தெரிந்து ஒருவர் மற்ற நான்கு பேருடன் சென்று அவரை ஜரோடோ ஏரியாவில் உள்ள ஒரு வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
அங்கே அந்த 5 பேரும் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இதில் இரண்டு பேர் மைனர். பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தைப் பற்றி வெளியில் சொன்னால் பாலியல் துஷ்பிரயோக வீடியோவை இண்டர்நெட்டில் பரவ விட்டுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அந்த மாணவி பெற்றோரிடம் இதுதொடர்பாக ஏதும் கூறவில்லை. ஆனால் அந்த மாணவியின் நடவடிக்கையில் சந்தேசம் அடைந்த பெற்றோர்கள் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர். பின்னர் நடந்த கொடுமையை அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அப்பெண்ணின் பெற்றோர் பொலிஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். மைனர் பையன்கள் இருவர் உள்பட 3 பேரை பொலிசார் கைது செய்தனர். மற்ற இரண்டு பேரை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
Average Rating