அருப்புக்கோட்டையில் வாக்கிங் சென்ற 2 பெண்களை தாக்கி நகைகள் பறிப்பு!!
அருப்புக்கோடடை எம்.டி. ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜோதி மணி (வயது55). அதே பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி. இவரது மனைவி கற்பகவடிவு (55).
ஜோதிமணியும், கற்பக வடிவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று காலையில் 2 பேரும் ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றனர்.
அப்போது அவர்கள் பின்னால் 2 வாலிபர்கள் நடந்து வந்தனர். அவர்கள் திடீர் என்று ஜோதிமணி, கற்பகவடிவு ஆகியோரை தாக்கினர். பின்னர் ஜோதிமணி கழுத்தில் கிடந்த 3½ பவுன் செயினையும் கற்பகவடிவு கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினையும் பறித்துவிட்டு ஓடினர். உடனே 2 பெண்களும் திருடன், திருடன் என கூச்சல் போட்டனர். அதற்குள் அந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து வாக்கிங் சென்ற பெண்களை தாக்கி நகைகளை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்.
Average Rating