நடத்தையில் சந்தேகம்: பெண் கழுத்தை நெரித்து கொலை!!

Read Time:3 Minute, 50 Second

817f2120-55ee-4763-90fb-dda655361157_S_secvpfஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 26). இவரது மனைவி கவிதா (25) இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கூலி வேலை செய்து வந்த பாக்கியராஜின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டது போல கண்ணில் பார்ப்பவர்களை கடித்து விட்டு ஓடி விடுவார்.

அவரிடம் கடிப்பட்டவர்களில் ஒருவர் இரும்புலிக் குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பாக்கியராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் கணவர் சிறைக்கு சென்றுவிட்டதால் கவிதா திருக்கடம்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து தங்கினார். சிறையில் அடைக்கப்பட்ட பாக்கியராஜ் விடுதலையாகி பிலாக்குறிச்சிக்கு செல்ல முயன்றார்.

அங்கு வரக்கூடாது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருக்கடம்பூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு பாக்கியராஜ் சென்று அங்கு வசித்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் வீட்டிலிருந்த பாக்கியராஜ் இரவு மனைவி, குழந்தைகளுடன் தூங்கினார். நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த கவிதாவை திடீரென தாக்கிய பாக்கியராஜ் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார். அருகில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த யாரும் இதனை உணரவில்லை.

பின்னர் அவரது உடலை அருகில் உள்ள தோட்டத்தில் வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்து எழுந்த கவிதாவின் பெற்றோர் மகள் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு ஊரார் திரண்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளிலில் தப்பி சென்ற பாக்கியராஜை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர் சென்ற மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியானதால் முந்திரி காட்டிற்குள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக டி.எஸ்.பி. வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் சமரசம் ஆகியோர் விசாரணை நடத்தியதில் மனைவி மீது பாக்கியராஜ் சந்தேகம் அடைந்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய பாக்கியராஜை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் பஸ்சில் போலீஸ் அதிகாரி மனைவிக்கு பாலியல் தொல்லை: வக்கீல் கைது!!
Next post உ.பி.யில் துப்பாக்கி வேலை செய்கிறதா என சோதித்ததில் சிறுவன் பலி!!