பெங்களூரில் சிறுமி கற்பழிப்பு விவகாரம்: 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் கைது!!
Read Time:1 Minute, 24 Second
பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூர் நகர காவல் ஆணையரை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மாணவியை கற்பழித்ததாக ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முஸ்தபா என்ற முன்னாவை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.
அம்மாநில அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு உடற்பயிற்சி ஆசிரியர்களை இன்று போலீசார் கைது செய்தனர். தங்களுக்கு கிடைத்த உறுதியான ஆதாரங்களை வைத்து இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாருக்கு கிடைத்துள்ள வீடியோ காட்சிகளில் மூவரில் ஒருவர் சிறுமியை கற்பழித்தது தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
Average Rating