உ.பி.யில் துப்பாக்கி வேலை செய்கிறதா என சோதித்ததில் சிறுவன் பலி!!
Read Time:1 Minute, 9 Second
உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சரியாக வேலை செய்கிறதா என சிறுவன் சுட்டுப்பார்த்ததில் அவனது உறவுக்கார சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ராம்கார்க் என்ற இடத்தைச் சேர்ந்தவன் பங்கஞ். மூன்றாம் வகுப்பு படிக்கும் இவன், தன் உறவுச்சசோதரர் யஸ்கந்துடன் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது துப்பாக்கியில் இருந்த குண்டு வெடிக்கிறதா என பார்ப்போம் என்று கூறிய யஸ்கந்த், பங்கஞ்சின் மார்பில் சுட்டுள்ளான். இதில் குண்டு பாய்ந்து பங்கஞ் சம்பவ இடத்திலேயே இறந்தான்.
அவன் பயன்படுத்தியது அனுமதி பெறாத துப்பாக்கி என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் அதிகாரி லோகேந்திரா பால் சிங் கூறினார்.
Average Rating