ஸ்டெம்செல்லை தானமாக கொடுக்க முன்வரவேண்டும்: ஐஸ்வர்யா ராய்!!

Read Time:3 Minute, 0 Second

18cf7ed3-2335-4cda-9675-aaee62577e53_S_secvpfஸ்டெம்செல் மருத்துவத்திற்கான விளம்பரத் தூதராக உள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஸ்டெம் செல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னையில், ஸ்டெம் செல் வங்கியை தொடங்கிய லைப்ஃசெல் நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது இந்த மருத்துவ முறையைப் பற்றி விளம்பரப்படுத்துவதற்கு இதனை மையக்கருத்தாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிப்பீர்களா? என்று நிருபர்கள் அவரிடம் கேட்டனர். தன் மனதில் தோன்றுவதை பளிச்சென சொல்வதில் ஐஸ்வர்யாவுக்கு எப்போதுமே தயக்கம் இருந்ததில்லை. எனவே உங்களிடம் கதை இருக்கின்றதா? என்று அவர் அந்த நிருபரிடம் உடனடியாகக் கேட்டார்.

பரந்த அளவிலான பார்வையாளர்களை அடைவதில் திரைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த முறையை விளம்பரப்படுத்துவதற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் அச்சு விளம்பரங்கள் என்று பலவகையிலும் நாங்கள் இப்போது முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.

எதிர்காலத் தலைமுறைக்கு இந்த மருத்துவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையினால்தான் நான் இதன் உறுப்பினர் குழுவில் செயல்பட்டு வருகின்றேன். அனைவரும் ஸ்டெம் செல்லை தானமாக கொடுக்க முன் வரவேண்டம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ராயும் தன்னுடைய மகள் ஆராத்யா பிறந்தபோது ஸ்டெம்செல்லை தானமாக கொடுத்துள்ளார். பெற்றோர்களாக இந்த அற்புதமான அனுபவத்தைப்பெற நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். ஸ்டெம்செல்களை சேமித்து குழந்தைகளுக்கு அளிப்பதன்மூலம் எதிர்காலத்தில் அவர்களைத் தாக்கும் நோயிலிருந்து மீண்டுவர இந்த சேமிப்பு உதவிகரமாக இருக்கும்.

எங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் என அனைவரையும் கலந்து ஆலோசித்து இந்த முடிவினை நாங்கள் மேற்கொண்டோம். இதுவே இந்த விளம்பரத்திற்கான குழுவிலும் உறுப்பினராக்கியது என்று ஐஸ்வர்யா ராய் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கைதான 2 பெண்கள் மீது மேலும் ஒரு வழக்கு!!
Next post நான் பக்கா பொறுக்கி: நடிகை தேவதர்ஷினி!!