(வீடியோ, படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால், அன்பளிப்பு செய்யப்பட்ட “குடிநீர் பௌஸர்” நிகழ்வு..!
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில் வட இலங்கை சர்வோதய சேவை வளாக மண்டபத்தில் (புங்குடுதீவு) இன்றையதினம் 30.07.2014 (புதன்கிழமை) பி.ப. 03.00 மணிக்கு நடைபெற்றது.
பேராசிரியர் கா. குகபாலன் (இணைப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), திரு. கு.சந்திரா (கிராம அலுவலர், புங்குடுதீவு), செல்வி க. புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), செல்வி. பொ.ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்), செயலாளர், -வேலணை பிரதேச சபை, திரு.ச.ரமணதாஸ் (பொருளாளர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.
நாட்டிய நடனத்துடன், விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கேற்றல் நடைபெற்று, இறை வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் செல்வி. கி. மனோரதி அவர்களினால் வரவேற்புரை நடத்தப்பட்டது. பின்னர் விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து..,
திரு.ச.ரமணதாஸ் அவர்களினால் (பொருளாளர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்) மேற்படி குடிநீர் பௌஸர் கையளிக்கப்பட்டு, செல்வி க. புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) ஆகியோரினால் பொறுப்பேற்க்கப்பட்டது.
இறுதியாக செல்வி.க.புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களினால் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றதுடன், வெள்ளோட்டமாக புங்குடுதீவின் சில பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.
***-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து***
**தகவல்..
சுவிஸ்ரஞ்சன்
ஊடகப் பொறுப்பாளர்- புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
Average Rating