மாணவன் தற்கொலை – கொலையாளி யார்? – பேஸ்புக்கில் தகவல்!!
ஐதராபாத் மியாப்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் சந்திரசேகர். அங்குள்ள தனியார் ஐ.ஐ.டி. கல்லூரியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் சந்திரசேகர் மற்றும் ஒரு மாணவியிடம் இருந்த செல்போனை கல்லூரி துணை முதல்வர் ரவி பறிமுதல் செய்தார். செல்போனில் இருவரும் காதல் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து உங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் போவதாகவும் அதோடு உன்னை கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்து விடுவேன் என்றும் சந்திரசேகரை கல்லூரி துணை முதல்வர் ரவி மிரட்டினார்.
இனால் பயந்து போன சந்திரசேகர் 2 நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை. நேற்று தனது பேஸ்புக்கில் எனது சாவுக்கு கல்லூரி துணை முதல்வர் ரவி தான் காரணம் என்று நண்பர்களுக்கு தகவல் பரப்பி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த மாணவ–மாணவிகள் கொந்தளித்தனர். துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு இந்த விவரம் கல்லூரி முதல்வர் சந்தேவுக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். மாணவன் சாவுக்கு துணை முதல்வர்தான் காரணம் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான துணை முதல்வர் ரவியை தேடி வருகிறார்கள்.
Average Rating